இணையத்தில் ஒரு படத்தை பற்றி சொன்ன விசயங்களின்
மொத்தக் கட்டுரை

80களின்
ஒரு இமயம் இவர்
1 6 வயதினிலே கிராமத்தில் ஆரம்பித்து
சிகப்பு ரோஜாக்கள் என மலர்ந்து
அலைகளை ஓய்வதில்லை என நிருபித்து
புதுமைப்பெண் படைத்து
மண்வாசனை கிளப்பி
ஒரு கைதிக்கும் டைரி உண்டு என சொல்லி
கடலோரத்தில் கவிதை சொல்லி
கொடி யை பறக்க விட்டு
கிராமத்தின் ஒவ்வொரு மண் துகளுக்கும் ஒரு கதை
உள்ளது என சொல்லும் மண்ணின் மைந்தன்
கொண்டு வந்த
அன்னக்கொடி என்ன ஆயிற்று
ஒரு பார்வை
இணையத்தில்
ஒரு படத்தை frame by frame
ஆக விமர்சிக்கும் அட்ரா சக்கை அவர்களின் விமர்சனம்
தளம் செல்ல
அட்ரா சக்கை விமர்சனம்
ஹீரோ ஆடு மேய்க்கிறவரு. அப்போ ஹீரோயின் மட்டும் ஐ.ஏ.எஸ் கலெக்டராவா இருக்கப்போகுது? அதுவும் சுள்ளி பொறுக்கும் கள்ளிதான். ஒரு டைம் ஹீரோ கால்ல முள் குத்தும்போது ஹீரோயின் தன் செருப்பைத்தர்றா. ஹீரோ அதுக்கு முன்னால லேடீசையோ, லேடீஸ் செப்பலையோ பார்த்ததில்லை போல. அந்த செருப்புக்கு முத்தம் கொடுக்கறார், மோந்து பாக்கறார். இன்னும் என்ன என்ன எல்லாமோ பண்றார்.
2 பேரும் லவ் பண்றாங்க. ஹீரோயின் அம்மாக்காரி ஒத்துக்கலை. பெண் கேட்க வந்த ஹீரோவையும், ஹீரோ அப்பாவையும் அவமானப்படுத்தி அனுப்பறா. ஹீரோ, ஹீரோயின் அம்மாவை ஓங்கி உதைச்சுடறாரு. போலீஸ் கேஸ் ஆகி 6 மாசம் உள்ளே போறாரு. அந்த சைக்கிள் கேப்ல வில்லன் கூட ஹீரோயினுக்கு மேரேஜ் ஆகிடுது. மேரேஜ் மட்டும் தான் ஆச்சு ஆனா வேற எதுவும் ஆகலை (ஏன்னா இது தமிழ்ப்படம்) வில்லன், ஏன்? ஹீரோயினை மேரேஜ் பண்ணியும் அவ கூட குடும்பம் நடத்தலை அப்டிங்கறதுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் மேட்டர் இருக்கு. என்ன பெரிய சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு இந்த படத்துக்கு? அதையும் சொல்லிடுறேன். சின்ன வயசுல வில்லனுக்கு படாத இடத்துல பட்டு மனைவியோட குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை.
வில்லனோட அப்பா, மருமக மேல அதாவது ஹீரோயின் மேல ஆசைப்படறாரு. அந்த மேட்டர் தெரிஞ்சு வில்லனே தன் அப்பாவை சதக். தான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு தெரிஞ்ச ஒரு லேடியை சதக். தனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர் இந்த உண்மையை ஊருக்கு சொல்லிடக்கூடாதுன்னு அவரையும் ஒரு சதக். மொத்தத்துல படமே சதக் சதக் தான் .
படத்தோட ஹீரோ லக்ஷ்மணாம், அய்யோ பாவம். ஓப்பனிங்கே சரி இல்லை. ஆள் நல்லா தான் இருக்கார். ஆனா அவருக்கு வாய்ப்பு குறைவு. தமிழ் இனத்தலைவருக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் ஒரு ஒத்துமை என்னான்னா 2 பேருமே தன் வாரிசை எப்படியாவது முன்னுக்கு கொண்டாந்துடனும்னு படாத பாடு படறாங்க. ஆனா அதுக்கு நம்மை ஏன் இப்படி பாடாப்படுத்தனும் ?
மனோஜ் தாஜ்மஹால்ல ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைச்சே அட்டர் ஃபிளாப் ஆன பட ஹீரோ. அவரை வில்லன் ஆக்கி படம் பூரா ஹீரோ மாதிரி அலைய விட்டா எவன் உக்காந்து பார்ப்பது ? இந்த லட்சணத்துல அவர் எந்திரன் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக் வேற, சகிக்கலை. (அவர் ம்மேமேமே என க்ளோசப்ல கத்தும்போது அப்பா சாமி முடியல)
ஹீரோயின் கார்த்திகா. அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு. அடேங்கப்பா. என்ன தான் கிராமியப்பெண்ணா மேக்கப் போட்டாலும் அதையும் மீறி அவர் முகத்துல ஒரு சிட்டி களை ஓடுது.
முதல் மரியாதை டைம்ல எல்லாம் பாரதிராஜா படத்தில் ஒரு கண்ணியம் இருக்கும். ஆனா இதுல காட்சிக்கு சம்பந்தமே இல்லாம கவர்ச்சிக்காட்சிகள் திணிக்கப்பட்டு ஒரு நல்ல கலைஞன் வியாபாரத்துக்காக விலை போனதை பறை சாற்றுது. யூ டூ பாரதிராஜா?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. இதுதான் என் லட்சியப்படம்னு பாரதிராஜா பிரஸ் மீட்ல அடிக்கடி உதார் விட்டு பில்டப் பண்ணினது
2. படத்துல தன் பையன் மனோஜ் தான் மெயின், அப்டிங்கற விஷயத்தை ரகசியமா வெச்சுகிட்டது (மேட்டர் லீக் ஆனா ஒரு பய படம் பார்க்க வர மாட்டானே?)
3. இது லைஃப் டைம் கேரக்டர்மா, உங்கம்மாவுக்கு எப்படி முதல் மரியாதையோ, அப்படி உனக்கு அன்னக்கொடி அப்டினு கார்த்திகா கிட்டே பீலா விட்டு முடிஞ்ச வரை கிளாமர் காட்ட வைத்தது
4. ஜீ.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி கூட (மேரேஜ் வேலைகள்) பிசியா இருந்ததால, இசையில பின்னணி இசைல கவனம் செலுத்தலை
5. ஆவாரங்காட்டுக்குள்ளே ஆடோட்டும் புள்ளே..., போறாளே போறாளே என்னை விட்டு..., காடை முட்டை கண் அழகி மாடு முட்டும் மார் அழகி... என 3 பாட்டு கேட்கும்படி இருக்கு. பாடல்கள் எடுத்த விதத்தில் மட்டும் பழைய பாரதிராஜா மனம் கவர்கிறார்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தன் கண் முன்னே தன் முன்னால் காதலி புருஷனுடன் சந்தோஷமா வாழ்ந்தாலே காதலன் இன்னொரு மேரேஜ் பண்ணிக்க 1000 தடவை யோசிப்பான். ஆனா தன் காதலி நல்லா வாழலை, மேட்டரே நடக்கலை என்ற விஷயம் தெரிஞ்சும் ஹீரோ எப்படி இன்னொரு மேரேஜும் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்கு அப்பாவும் ஆகறாரு?
2. தன் மனசில் காதலனை வெச்சுக்கிட்டு என்ன நிர்ப்பந்தத்துல ஹீரோயின், வில்லனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டா? என்பதற்கு சரியான விளக்கம் படத்துல இல்லை (ஹீரோயின் அம்மா வில்லன் கிட்டே கடன் வாங்கிக்கிட்டார் என்பதற்கான காட்சிகளே இல்லை )
3. கதை நடக்கும் கால கட்டம் 1960 மாதிரி தெரியுது. போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் தான் அப்டி காட்டுது
4. வில்லன் “நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” கேரக்டர். ஆனா அவர் எதுக்கு பலான லேடி வீட்டுக்குப்போறார். போய் அவமானப்படறார்?
5. வில்லன், தான் தாம்பத்யத்துக்கு லாயக்கில்லைனு தெரிஞ்சும், எதுக்கு ஒரு மேரேஜ் பண்ணிக்கறார்? மனைவியை கொல்றார்? மீண்டும் ஹீரோயினை எதுக்கு மேரேஜ் பண்றார்?
6. சப்பாத்திக்கள்ளி செடி இலைல முள்ளால் கீறி எழுதுனா பால் வடியும், ஆனா சுண்ணாம்புல எழுதுன மாதிரி நீட்டா எழுத்துக்கள் இருக்கே எப்படி? இதை ஒரு சிட்டி சப்ஜெக்ட் எடுக்கற டைரக்டர் எடுத்தா சரி தெரியலைன்னு விட்டுடலாம், யூ டூ பா ரா?
7 ஹீரோயின் தன் பேரை அன்னக்கொடின்னு சப்பாத்திக்கள்ளி இலைல எழுதறா. அப்போ அங்கே வரும் ஹீரோ (ஆடு மேய்ப்பவர்) என்ன எழுதனும்? அன்னக்கொடிப்ரியன், அன்னக்கொடி நேசன் இப்படித்தானே எழுதனும், எதுக்கு கொடி வீரன்? அப்டினு எழுதறார்? இவர் வீரரா? (டைட்டிலை நியாயப்படுத்த?)
8. ஒரு சீன்ல ஒரு பிச்சைக்காரி ஹீரோயின் அம்மா கிட்டே வர்றா. அவளுக்கு எதுக்கு அவ்ளவ் மேக்கப்? (டான்ஸ் மாஸ்டர் மாதிரி)
9 நட்ட நடு ராத்த்ரி 12.30 மணிக்கு வில்லன், ஹீரோயினை துரத்திட்டு ஓடறார். ஊரு சனமே தூங்கிட்டு இருக்கு. ஆனா ஒரு லேடி அப்போ தான் குப்பை கொட்ட வாசலுக்கு வருது. அந்த நேரத்துக்கு யாராவது குப்பை கொட்ட வருவாங்களா?
10. வில்லன், ஹீரோவோட சம்சாரத்தை கடத்திட்டுப்போறார். எதுக்கு ஹீரோ உட்பட எல்லாரும் பதை பதைக்கறாங்க? வில்லன் தான் அதுக்கு லாயக்கில்லாதவன் ஆச்சே?
11. வில்லன் தன் மனைவியை கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட் பண்ண தூக்குக்கயித்துல மாட்டி விடறாரு. தூக்கு போட்டுக்கிட்டு செத்தா நாக்கு வெளீல தள்ளி இருக்கனுமே? அப்படி இல்லாதப்ப ஊர் சனங்க ஏன் சந்தேகப்படலே? போலீஸ் விசாரணை பண்ணலை?
12. கார்த்திகா ஒரு டைம் ஆவேசம் ஆகி, வில்லன் கிட்டே “நீ என் புருஷன் தானே, பாயை போட்டாச்சு, வாடா பார்க்கலாம்“ என போரிங்க் பைப் லேடி ரேஞ்சுக்கு இறங்கி கூப்பிடுவது மகா மட்டமான இயக்கம். அந்த சீனில் காமிரா ஆங்கிள் ஆபாசம்
13. நான் ஆம்பளைடி 1000 வீட்டுக்குப்போவேன், நீ பொம்பளை போன்ற கேவலமான ஆணாதிக்க வசனங்கள் எதுக்கு?
14. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாட்டு ஹம்மிங்கை BGMஆக பல காட்சிகளில் ஜிவி பிரகாஷ் உல்டா பண்ணிட்டாரு
மனம் கவர்ந்த வசனங்கள்
1. கோழி திருடுனவன் கோளாறா தப்பிச்சுக்கிட்டானாம். கோழி இறகுல காது குடைஞ்சவன் மாட்டிக்கிட்டானாம் (கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம் நாவலில்)
2. என்னை பரிகாசம் பண்ண உனக்கு வயசு பத்தாதுடி. நான் வயசுக்கு வந்து பல வருசம் ஆகுதுடா. சீர் செலவுக்கு பயந்து வீட்ல சடங்கு வைக்கலை
3 ஆத்துத்தண்ணி ஒரு ருசி. ஊத்துதண்ணி ஒரு ருசி. சுனைத்தண்ணி மூலிகை ருசி (பாலகுமாரனின் தலையணைப்பூக்கள் நாவல் வசனம்)
4 செருப்புப்போடாம போனா கால்ல முள் தான் குத்தும், ஆனா இடைய சாதி நாம செருப்புப்போட்டுட்டுப்போனா ஆளையே குத்திடுவாங்க
5 . உங்களைப்பார்த்ததுல எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, கால்ல என்ன சக்கரமா கட்டி வெச்சிருக்கே? (ஒய்.ஜி.மகேந்திரனின் வசூல் சக்கரவர்த்தி நாடக வசன உல்டா)
6. போலீஸ் - நீ எந்த ஊரு? லேடி : எந்த ஊர்ல இருந்து பிடிச்சுட்டு வந்தீகளோ அதே ஊருதான்.
7. கடிச்சுக்க ஒண்ணும் இல்லை. பொய், உன் கிட்டே 20 இருக்கு. புரியல, உன் கை விரல்கள், கால் விரல்கள்.
கமெண்ட் : அன்னக்கொடி - தயாரிப்பாளர்க்கு அன்னக்காவடி - மணிவண்ணன் ஆத்மா சாந்தி அடையட்டும் - படம் அட்டர்பிளாப் - டி வில போட்டாக்கூட பார்க்க முடியாது.
தினமலர் விமர்சனம்
இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான இயக்குனர் அமீர் - இனியா விலகிய அல்லது விலக்கப்பட்ட கதை! அன்னக்கொடியும் கொடிவீரனும் என ஆரம்பத்தில் தலைப்பு வைக்கப்பட்டு அதன்பின் ஏதேதோ காரணங்களால் அது அன்னக்கொடியாக சுருங்கிய கதை., இப்பொழுது பட ரிலீஸ்க்கு பின் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் என்னதான் காதலி என்றாலும் அடுத்தவர் மனைவியை கூட்டி வருவது போன்ற காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற கதை... என "அன்னக்கொடி" திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் ஏகப்பட்ட பிரச்னைகள்... பஞ்சாயத்துக்களை இத்திரைப்படம் சந்தித்து வந்தாலும் கிராமத்து கதைகளின் ராஜா - பாரதிராஜாவை மீண்டும் அதே பழைய பொலிவோடு அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை ஆணித்தரமாக அடித்துக்கூறிட வந்திருக்கும் படம் தான் "அன்னக்கொடி" என்றால் மிகையல்ல!!
பாரதிராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்து காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல் தான் "அன்னக்கொடி" படம் மொத்தமும்! அன்று பல வருடங்களுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படக்கதையை புனைந்திருக்கும் பாரதிராஜா, ஆடுமேய்க்கும் இளைஞனுக்கும், அதே மாதிரியான ஒரு யுவதிக்கும் இடையே காதல் பிறக்கும் கதையை அழகாக சொல்லியிருப்பதோடு, அது கரிசல்காட்டில் பூத்து காய்த்து, கனியாகும் தருவாயில், வில்லன் விஸ்வரூபமெடுத்து நயவஞ்சகமாக நாயகியின் கணவராகி அந்த காதல் மரத்தை வேரோடு எப்படி சாய்க்கிறார் என்பதையும் தனக்கே உரிய கிராமத்து கிளுகிளுப்புகளுடன் காதல் கிளிகளும், குயில்களும் பறக்க மண்வாசனையுடன் படமாக்கி, கதையாக்கியிருக்கிறார்.
அதன் பின்னும் நாயகருக்கும் நாயகிக்குமான காதல் எப்படி மீண்டும் துளிர்கிறது என்பது தான் அன்னக்கொடியின் வித்தியாசமும் விறுவிறுப்புமான சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் காரணமான கிளைமாக்ஸ்! அதிலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் வீரத்தையும், ஈரத்தையும், தீரத்தையும் காட்டி காண்போர் கண்களையும் நெஞ்சங்களையும் கனக்க செய்வதுதான் "அன்னக்கொடி" படத்தின் பி மற்றும் சி. சென்டர்களுக்கான பலமும், ஏ சென்டருக்கான பலவீனமும் எனலாம்!
அறிமுகநாயகர் லஷ்மண், கொடிவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகி கார்த்திகாவை தன் கை விரல்களில் நனைந்திருக்கும் கம்பங்கூழை ஒவ்வொரு விரலில் ஒட்டியுள்ள கூழுக்கும் ஒரு சும்மானாச்சுக்கும் மருத்துவ குணமும் சொல்லி நக்கவிடும் காட்சி ஒன்று போதும் லஷ்மணின் நடிப்புக்கு கட்டியம் கூற...
நாயகி கார்த்திகாவும் அன்னக்கொடியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அடுத்தடுத்து கோ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் இதில் தான் தன் அம்மா ராதாவுக்கு தானும் சற்றும் சளைத்தவரில்லை... என்பதை அம்மணி மெய்ப்பித்திருக்கிறார். பலே பலே!
லஷ்மண் - கார்த்திகா இருவருமே பிரமாதம் என்றாலும் இவர்கள் இருவரையும் தனது வில்லத்தனத்தால் விவரமாக ஓரங்கட்டியிருக்கிறார் மனோஜ் கே.பாரதி! வாவ்., மனிதர் மன்சூர் அலிகான் ஸ்டைலில் ரேக்ளா வண்டியும் அடிவாங்க மாடுகளும், மனிதர்களுமாக என்னமாய் மிரட்டியிருக்கிறார்! அதுவும் "வெடக்கோழி கொழம்புதான் வெளஞ்ச கம்மங்கூழு தான் சஞ்சனக்கா சனக்கு தான் - இது சடையன் போட்ட கணக்கு தான்..." எனப்பாடியபடியும், ஆடு மாதிரி கத்தி, மனைவியின் பழைய காதலை அவருக்கு ஞாபகப்படுத்தும் இடங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். பேஷ், பேஷ்! ஹீரோவாக தோற்றாலும் வில்லனாக ஜெயித்திருக்கிறார் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் என்றால் மிகையல்ல!!
மருமகளையே படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர் மனோஜ்குமார், வில்லன் மனோஜை வீழ்த்த போராடும் மீனாளும், கதாநாயகியின் அம்மா கள்ளச்சாராய பேர்வழி ரமாபிரபா, நாயகர் லஷ்மணின் மனைவியாக அறிமுகமாகும் சுபிக்ஷா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை அன்னக்கொடிக்கு உயிரோட்டம் தருகிறது என்றால், சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு உயிர் மூச்சாக திகழ்கிறது!
வழக்கம் போலவே பாரதிராஜா, படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் தோன்றி என் இனிய தமிழ் மக்களே... என ஆரம்பித்து இந்த கதை பிறந்த கதையையும் நடந்த சூழலையும் விளக்குவதில் இருக்கும் கிக், படம் முழுக்கவும் இருப்பது "அன்னக்கொடி"யின் பெரிய பலம்!
ஆகமொத்தத்தில், "அன்னக்கொடி" டாக்டர் ராமதாஸ்க்கு - "கறுப்புக்கொடி!" பாரதிராஜா ரசிகர்களுக்கு - "வண்ணக்கொடி!!" மற்றவர்களுக்கு...?!
one india விமர்சனம் http://tamil.oneindia.in/movies/review/2013/06/annakkodi-review-178100.html
சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்)... ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல் பூக்கிறது. ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரையே வளைத்து வைத்திருக்கிற சடையனின் (மனோஜ்) காமப் பார்வைக்குள் சிக்குகிறாள் அன்னக்கொடி. அந்த நேரத்தில் அன்னக்கொடியை பெண்கேட்டு அப்பனோடு வருகிறான் கொடிவீரன். தாழ்ந்த சாதிக்காரன் எப்படி பெண் கேட்கலாம் என அவர்களை அடித்து உதைத்து சாணியைக் கரைத்து ஊற்றி அசிங்கப்படுத்தி அனுப்புகிறாள் அன்னக்கொடியின் தாய். விஷயமறிந்த சடையன் தன் அடிமையான போலீசுக்கு சொல்லி கொடிவீரனை சிறையில் தள்ளுகிறான். ஒரு நாள் அன்னக்கொடியின் தாய் செத்துப் போக, அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக அன்னக்கொடியை தன் வசமாக்கிக் கொள்கிறான் சடையன். சடையனுக்கு மனைவியாக அன்னக்கொடி வாழ்ந்தாளா? கொடிவீரன் காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் ரத்தக்களறியாக சொல்லி முடிக்கிறார் க்ளைமாக்ஸில். பாரதிராஜாவின் கிராமத்துக் கதைகள் பெரும்பாலும் சோடைபோகாதவை. விலக்காக முதல் சொதப்பல் ஈரநிலம்... அந்தப் பட்டியலில் இப்போது அன்னக்கொடி!
மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த போலீஸ்காரர்... கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். சாதி... இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல் ஜோடி... பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். இதை அவர் எந்த சமரசமும் இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும். ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது. பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில், அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..!
4தமிழ்மீடியாவின்
திரை விமர்சனம்
உங்கள் பாசத்திற்குரிய பதினாறு வயதினிலே பாரதிராஜா, எழுபத்தியொரு வயசில் எடுத்திருக்கும் படம்.
தமிழ் சினிமாவுலகமே திரண்டு வந்து 'தடுப்பூசி' போட்டாலும் அடங்காத அவஸ்தையை தருகிறது இது.
கீழ்சாதி ஆணுக்கும் மேல்சாதி பெண்ணுக்கும் லவ். அல்லது கீழ்சாதி பெண்ணுக்கும் மேல்சாதி ஆணுக்கும் லவ். இப்படி கால காலமாக காதல் கண்ணாமூச்சு விளையாடியே சொசைட்டியில் சூப்பர் டைரக்டராக வலம் வந்த பாரதிராஜா, இந்த முறையும் அதே போலொரு அரத பழசான ஈயம் பித்தளையோடு வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை பேரீச்சம் பழமென்ன, அதன் கொட்டை கூட கிட்டாது போலிருக்கிறது. ஏன்? அவ்வளவு 'புவர்' பிரசன்ட்டேஷன்!
தமிழக போலீஸ்காரர்கள் அரைக்கால் சட்டையோடு அலைந்த காலம்தான் இவர் படத்தின் பீரியட்! ஆழாக்கு சைசுக்கு ஒரு ஊர். அங்கே வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையையும் சேர்த்து பிடுங்கும் ஒரு குடியானவன். இவனிடம் பெண்டாட்டியையும் சேர்த்து பறிகொடுக்கும் கீழ்சாதி ஆண்கள் வாழ்கிறார்கள். இந்த பெரிய மனுஷனுக்கு ஒரு மகன். ஸ்கிரீனில் தோன்றும் போதெல்லாம் வெடக்கோழி குழம்புதான். 'வௌஞ்ச கம்பங்கூழுதான். சஞ்சனக்கா சனக்குதான். இது சடையன் போட்ட கணக்குதான்...' என்று பாட்டு பாடிக் கொண்டே வருகிற இவனுக்கு பொழுதுபோக்கு, எந்நேரமும் மொச பிடிக்க அலைவது. அதாவது பெண்களை மடக்கி டேஷ்... டேஷ்...
இத்தனைக்கும் இவருக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாதாம். இந்த கேரக்டரை ரத்தமும் சதையுமாக என்று சொல்ல முடியாது. சத்தமும் சங்கடமுமாக செய்திருக்கிறார் பாசத்திற்குரிய பாரதிராஜாவின், பச்சாதாபத்திற்குரிய மகன் மனோஜ்.
இதே ஊரில் ஆடுமேய்க்கும் விடலை பசங்களான லட்சுமணனுக்கும், கார்த்திகாவுக்கும் லவ். யெஸ்... கார்த்திகா மேல்சாதி¢ப் பெண். இதை பொறுத்துக்கொள்ள முடியாத மனோஜ் திட்டம் போட்டு லட்சுமணனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு கார்த்திகாவை கவர்கிறார். இதற்கு வசதியாக திடீரென மண்டையை போட்டுவிடுகிறார் ஹீரோயினின் அம்மா பார்வதியும்.
கார்த்திகாவை திருமணம் செய்து கொண்ட மனோஜ், அப்படி செய்ததற்கான காரணத்தை நிறைவேற்றினாரா? லட்சுமணன், கார்த்திகா லவ் அதற்கப்புறமும் தொடர்ந்ததா? போன்ற அதி அவசியமான கேள்விகளோடு நகர்கிற படம் ஒரு வழியாய் முடிவதற்குள், நாலைந்து பிட்டு படம் பார்த்த திருப்தியோடு கலைகிறான் ரசிகன். ஏதோ சந்திரமண்டலத்தில் பிலிம் எடுத்து, செவ்வாய் கிரகத்தில் டெவலப் பண்ணியது மாதிரி, இந்த கதை உருவான பின்னணியை ஒரு மலை முகட்டின் உச்சியில் ஏறி நின்று கொண்டு மூச்சு முட்ட விவரித்து முடிக்கிறார் நமது பாசத்திற்குரிய பாரதிராஜா.
கார்த்திகாதான் ஐயோ பாவம். ஒரு கோழி உரிக்க உரிக்க உம்மென்றே நின்றிருந்த கொடுமையை எங்கு போய் சொல்லி கதற? ஒரு காட்சியில் பாயை விரித்து படுக்க அழைக்கிறார் மனோஜை. 'ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான் சாப்பிடுறீயா' என்று அவர் கேட்கிற அந்த காட்சியில் கார்த்திகாவின் ஆவேசத்தை பார்த்து நரம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது நமக்கு. இப்படியொரு காட்சி சிந்து சமவெளி, உயிர் பட புகழ் டைரக்டர் சாமிக்கே தோன்றியிருக்குமா, தெரியாது!
பெண் ஜென்மத்தை எவ்வளவு இழிவாக நினைத்திருக்கிறார் பாரதிராஜா என்பதை இன்னொரு காட்சியில் பார்க்கையில் பேரதிர்ச்சி வருகிறது. தன் மனைவியை வட்டி பணத்திற்காக கடத்திக் கொண்டு வைத்திருக்கிறார்கள். அங்கே அதே மனைவியை எப்படியோ சந்திக்கிறான் அந்த அப்பாவி கணவன். யாருமில்ல. வா ஓடிப் போயிடலாம் என்று அவன் அழைக்க, அட போய்யா நீ. இங்க எனக்கு எல்லாம் கிடைக்குது. உங்கூட வந்தா என்ன கிடைக்கும் என்று மறுக்கிறாள் அவள். (ஜோக்காமா...?) இப்படி சென்ட்டிமென்ட் காட்சிகளையெல்லாம் கூட தனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் கை நழுவ விடுகிறார் பா.ரா.
இளைஞர்கள் தனக்கு பிடித்தமான ஃபிகர்களை பீட்சா கார்னரில் பிக்கப் பண்ணி ஐநாக்ஸ் தியேட்டரில் கைகழுவுகிற இந்த காலத்தில், நம்ம டைரக்டர் காதலை வெளிப்படுத்த நினைத்து வைத்திருக்கும் காட்சிகள் இருக்கிறதே... பயங்கரம். முள்ளு கடிச்சுருச்சா. கவலைப்படாதே. வைத்தியத்துக்கு இந்த விரல சப்பு என்று ஹீரோ லட்சுமணன் தன் நடுவிரலை ரொம்ப குளோஸ் அப்பில் கார்த்திகாவின் வாய்க்குள் செலுத்த, உவ்வேவ்வ்வ்வ்வ்... இன்னொரு காட்சியில் கார்த்திகாவின் நகத்தையெல்லாம் கடித்து தனது கூழுக்கு தொட்டுக் கொள்கிறாராம். அட நளபாக மன்னனுங்களா.
ஒரு காட்சியில் கார்த்திகாவின் அம்மா இறந்ததை கேள்விப்பட்டு ஓடிவருகிறார் ஹீரோ. அவர் து£ர நின்று பார்க்கும் போது டெட் பாடி பூமாலையோடு கிடக்கிறது. அந்த ஷாட் மாறவே இல்லை. அதற்குள் பூமாலையோடு கல்யாணமாகி ஹீரோவை கடந்து போகிறார்கள் கார்த்திகாவும் மனோஜும். ஃபாஸ்ட் எடிட்டிங்காம். புரியலே ராசா!
சரி... பாடல்களாவது கேட்கிற மாதிரி இருக்கிறதா? அதுவும் இல்லை. ஜிவி.பிரகாஷ் தப்பான அட்ரசுல தலையை நீட்டிட்டோமா என்ற அச்சத்திலியே ஆர்மோனிய பொட்டியை எடுத்ததாக தெரிகிறது. இவர்தான் இப்படி. பின்னணி இசைக்கென தனியாக நியமிக்கப்பட்ட சபேஷ் முரளியும் கூட சகிக்க முடியாமல் இசையமைத்திருக்கிறார்கள்.
வலிய திணிக்கப்பட்ட ஆபாச காட்சிகளும், அபத்தங்களும் இயக்குனர் இமயத்தை தடுக்கி விழவே வைத்திருக்கின்றன. தன் இத்தனை வருட பெருமைகளையும் அன்னக்கொடி என்ற ஒரு கூழாங்கல்லால் தடுக்கி விழ வைத்திருக்கிறார் அவரே.
அன்னக்கொடி, ரொம்ப ரொம்ப சின்னக் கொடி!
கீழ்சாதி ஆணுக்கும் மேல்சாதி பெண்ணுக்கும் லவ். அல்லது கீழ்சாதி பெண்ணுக்கும் மேல்சாதி ஆணுக்கும் லவ். இப்படி கால காலமாக காதல் கண்ணாமூச்சு விளையாடியே சொசைட்டியில் சூப்பர் டைரக்டராக வலம் வந்த பாரதிராஜா, இந்த முறையும் அதே போலொரு அரத பழசான ஈயம் பித்தளையோடு வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை பேரீச்சம் பழமென்ன, அதன் கொட்டை கூட கிட்டாது போலிருக்கிறது. ஏன்? அவ்வளவு 'புவர்' பிரசன்ட்டேஷன்!
தமிழக போலீஸ்காரர்கள் அரைக்கால் சட்டையோடு அலைந்த காலம்தான் இவர் படத்தின் பீரியட்! ஆழாக்கு சைசுக்கு ஒரு ஊர். அங்கே வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையையும் சேர்த்து பிடுங்கும் ஒரு குடியானவன். இவனிடம் பெண்டாட்டியையும் சேர்த்து பறிகொடுக்கும் கீழ்சாதி ஆண்கள் வாழ்கிறார்கள். இந்த பெரிய மனுஷனுக்கு ஒரு மகன். ஸ்கிரீனில் தோன்றும் போதெல்லாம் வெடக்கோழி குழம்புதான். 'வௌஞ்ச கம்பங்கூழுதான். சஞ்சனக்கா சனக்குதான். இது சடையன் போட்ட கணக்குதான்...' என்று பாட்டு பாடிக் கொண்டே வருகிற இவனுக்கு பொழுதுபோக்கு, எந்நேரமும் மொச பிடிக்க அலைவது. அதாவது பெண்களை மடக்கி டேஷ்... டேஷ்...
இத்தனைக்கும் இவருக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாதாம். இந்த கேரக்டரை ரத்தமும் சதையுமாக என்று சொல்ல முடியாது. சத்தமும் சங்கடமுமாக செய்திருக்கிறார் பாசத்திற்குரிய பாரதிராஜாவின், பச்சாதாபத்திற்குரிய மகன் மனோஜ்.
இதே ஊரில் ஆடுமேய்க்கும் விடலை பசங்களான லட்சுமணனுக்கும், கார்த்திகாவுக்கும் லவ். யெஸ்... கார்த்திகா மேல்சாதி¢ப் பெண். இதை பொறுத்துக்கொள்ள முடியாத மனோஜ் திட்டம் போட்டு லட்சுமணனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு கார்த்திகாவை கவர்கிறார். இதற்கு வசதியாக திடீரென மண்டையை போட்டுவிடுகிறார் ஹீரோயினின் அம்மா பார்வதியும்.
கார்த்திகாவை திருமணம் செய்து கொண்ட மனோஜ், அப்படி செய்ததற்கான காரணத்தை நிறைவேற்றினாரா? லட்சுமணன், கார்த்திகா லவ் அதற்கப்புறமும் தொடர்ந்ததா? போன்ற அதி அவசியமான கேள்விகளோடு நகர்கிற படம் ஒரு வழியாய் முடிவதற்குள், நாலைந்து பிட்டு படம் பார்த்த திருப்தியோடு கலைகிறான் ரசிகன். ஏதோ சந்திரமண்டலத்தில் பிலிம் எடுத்து, செவ்வாய் கிரகத்தில் டெவலப் பண்ணியது மாதிரி, இந்த கதை உருவான பின்னணியை ஒரு மலை முகட்டின் உச்சியில் ஏறி நின்று கொண்டு மூச்சு முட்ட விவரித்து முடிக்கிறார் நமது பாசத்திற்குரிய பாரதிராஜா.
கார்த்திகாதான் ஐயோ பாவம். ஒரு கோழி உரிக்க உரிக்க உம்மென்றே நின்றிருந்த கொடுமையை எங்கு போய் சொல்லி கதற? ஒரு காட்சியில் பாயை விரித்து படுக்க அழைக்கிறார் மனோஜை. 'ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான் சாப்பிடுறீயா' என்று அவர் கேட்கிற அந்த காட்சியில் கார்த்திகாவின் ஆவேசத்தை பார்த்து நரம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது நமக்கு. இப்படியொரு காட்சி சிந்து சமவெளி, உயிர் பட புகழ் டைரக்டர் சாமிக்கே தோன்றியிருக்குமா, தெரியாது!
பெண் ஜென்மத்தை எவ்வளவு இழிவாக நினைத்திருக்கிறார் பாரதிராஜா என்பதை இன்னொரு காட்சியில் பார்க்கையில் பேரதிர்ச்சி வருகிறது. தன் மனைவியை வட்டி பணத்திற்காக கடத்திக் கொண்டு வைத்திருக்கிறார்கள். அங்கே அதே மனைவியை எப்படியோ சந்திக்கிறான் அந்த அப்பாவி கணவன். யாருமில்ல. வா ஓடிப் போயிடலாம் என்று அவன் அழைக்க, அட போய்யா நீ. இங்க எனக்கு எல்லாம் கிடைக்குது. உங்கூட வந்தா என்ன கிடைக்கும் என்று மறுக்கிறாள் அவள். (ஜோக்காமா...?) இப்படி சென்ட்டிமென்ட் காட்சிகளையெல்லாம் கூட தனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் கை நழுவ விடுகிறார் பா.ரா.
இளைஞர்கள் தனக்கு பிடித்தமான ஃபிகர்களை பீட்சா கார்னரில் பிக்கப் பண்ணி ஐநாக்ஸ் தியேட்டரில் கைகழுவுகிற இந்த காலத்தில், நம்ம டைரக்டர் காதலை வெளிப்படுத்த நினைத்து வைத்திருக்கும் காட்சிகள் இருக்கிறதே... பயங்கரம். முள்ளு கடிச்சுருச்சா. கவலைப்படாதே. வைத்தியத்துக்கு இந்த விரல சப்பு என்று ஹீரோ லட்சுமணன் தன் நடுவிரலை ரொம்ப குளோஸ் அப்பில் கார்த்திகாவின் வாய்க்குள் செலுத்த, உவ்வேவ்வ்வ்வ்வ்... இன்னொரு காட்சியில் கார்த்திகாவின் நகத்தையெல்லாம் கடித்து தனது கூழுக்கு தொட்டுக் கொள்கிறாராம். அட நளபாக மன்னனுங்களா.
ஒரு காட்சியில் கார்த்திகாவின் அம்மா இறந்ததை கேள்விப்பட்டு ஓடிவருகிறார் ஹீரோ. அவர் து£ர நின்று பார்க்கும் போது டெட் பாடி பூமாலையோடு கிடக்கிறது. அந்த ஷாட் மாறவே இல்லை. அதற்குள் பூமாலையோடு கல்யாணமாகி ஹீரோவை கடந்து போகிறார்கள் கார்த்திகாவும் மனோஜும். ஃபாஸ்ட் எடிட்டிங்காம். புரியலே ராசா!
சரி... பாடல்களாவது கேட்கிற மாதிரி இருக்கிறதா? அதுவும் இல்லை. ஜிவி.பிரகாஷ் தப்பான அட்ரசுல தலையை நீட்டிட்டோமா என்ற அச்சத்திலியே ஆர்மோனிய பொட்டியை எடுத்ததாக தெரிகிறது. இவர்தான் இப்படி. பின்னணி இசைக்கென தனியாக நியமிக்கப்பட்ட சபேஷ் முரளியும் கூட சகிக்க முடியாமல் இசையமைத்திருக்கிறார்கள்.
வலிய திணிக்கப்பட்ட ஆபாச காட்சிகளும், அபத்தங்களும் இயக்குனர் இமயத்தை தடுக்கி விழவே வைத்திருக்கின்றன. தன் இத்தனை வருட பெருமைகளையும் அன்னக்கொடி என்ற ஒரு கூழாங்கல்லால் தடுக்கி விழ வைத்திருக்கிறார் அவரே.
அன்னக்கொடி, ரொம்ப ரொம்ப சின்னக் கொடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக