வெள்ளி, 5 ஜூலை, 2013

சிங்கம் 2 ஒரு பார்வை

சிங்கம் 2 ஒரு பார்வை 

வணக்கம் நண்பர்களே 
சிங்கம் 2 பற்றி ஏற்கனவே கூறியது போல் பில்லா 2 போல் இல்லாமல் 
முனி 2 போல் பட்டையை கிளப்புகிறது 

ஹரி அவர்களின் திரைக்கதை மற்றும் ட்விஸ்ட் திலகம் தான் என்பதை 
மீண்டும் நிருபித்து உள்ளார் 
பர பரப்பு குறையாமல் திரைக்கதை அமைத்து 
வெற்றி கோடி நாட்டிய ஹரிக்கு நம் வாழ்துக்கள் 

இணையம் முழுக்க சுற்றி வந்த போது கிடைத்த விமர்சனம் உங்களுக்காக 

முதலில்  விமர்சன சூப்பர் ஸ்டார் 
செந்தில் குமார் அவர்களின் அட்ராசக்க விமர்சனம் 
தினமலர் இதை வெளி இட்டு இருக்கிறது என்றால் 
பார்த்து கொள்ளுங்கள் 
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com 

நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம ஒரு சாதாரண ஸ்கூல்ல என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக்கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம்.ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல் மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை .சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது . காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம . போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும் சூப்பர் . ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார். ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில் கொழுக் மொழுக் கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை 


சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 




படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 


வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு 

படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது 
2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி 
3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்ட
லத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி லேடி சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு 
4. ஆபரேஷன் டி என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவு்ண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் ) 
5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ் டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு 
6 விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை 
7 கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம் 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. ஜஸ்ட் 15 வயசு ஆன ( !!!!????) பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா? 
2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்? 
3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்? 
4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க? 
5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ... 
6. சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ? 
7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ? 
8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா ) 
9. பொண்ணு சமப்ந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை ?
10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள் தந்தி மூலமாகவோ , ஃபோன் கால் மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சு ம்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை? 
11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சே பாஸ் 
12. ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம் எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்ப
13 . ஒரு சர்வதேச கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்ய


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் # சந்தானம
2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே.நான் தாங்கிட்டேன்.நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே # பக் சீட் பிகர் மேல வி பு ச
3. தூரத்துல இருக்கற ஆளை 10 ஸெகண்ட்ஸ் ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்ளவ் நேரம் ஆகும் ? # நோ டபுள் மீனிங்.ஹீரோ டூ வில்லன் 
4. வில்லன் ன் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல.வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன
5. தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார்.புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார் .அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் # சந்தானம
6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன்.நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?
7. சந்தானம் - டீச்சர் ஜாக்கெட்ல ஓஜோன்ல ஓட்டை விழுந்த மாதிரி ஏகப்பட்ட பொத்தல்கள் இருக்க
8. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போ
9. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுடு.
சந்தானம் - பாவ மன்னிப்பு ,பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா? 
10. இந்த வயசுல பிகர் வர்றதும் ,வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் # சி 2 சந்தானம
11. சந்தானம் - ஸாரி மேடம்.உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும
12. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? #தொப்ப
13. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும்.அது காதல் இல்லை.இன்பேக்சுவேசன
14. சந்தானம் = சார்.பாயே மூடு,பீச்சே மூடுனு சொல்றீங்ளே.பாயை மூடிடலாம்.பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?
15. நீங்க அம்மா , அப்பா பேச்சை கேட்பீங்களா அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போல ம்)
16. என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?பின்னே , உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?
17. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்பட
18. ஆமா , நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுத
19. ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை , 3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன2 நாய் தானே இங்கே இருக்கு ?அந்த 3 வது நாய் நீ தாண்ட
20. மிஸ் ! எங்கே போய் இருந்தீங்க?சொல்ல மாட்டேனநீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா/
21. செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும
22. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவ
23. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும் ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)
24 விருந்தாளியையே இப்படி ப்வெளுக்கறாங்களே இந்தம்மா இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்
25. காதல்னா என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும
26. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாத
27. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?
28. அமலாபால் நடிச்ச படம் மைனா , ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா , என்னை விட்டுடு நைனா # சந்தானம



படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 

1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே.இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும
2. அழகு ரதி அனுஷ்கா முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல
3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?
4. சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவத
5. 50 கிமீ வேகத்துல போகும் ப்ஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு # சிங்கம் சிங்கம் துரை துரை சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங
6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல் ல.அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல் ல # 6 மனமே 6
7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?
8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் # அனுஷ் பழம
9. ஸார்.ஹன்சிகா சார்.பாத்ரூம்ல குளிக்குது ஸார். # சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி நம்ம லாஜிக் கொஸ்டீன்? 
10 சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல் # சூர்யா பாவம் 
11. ஹன்சிகா டென் த் படிக்கற ஸ்டூடண்ட்டாம்.அய்யோ ராம
12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்?
சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ் 
13. 120 கிமீ வேகத்துல 4,ஜீப் ஹீரோவைத்துரத்துது.பிடிக்க முடியல.செம ஓட்டம்.கின்னஸ் ரெக்கார்ட
14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?
15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் =41
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 
ரேட்டிங் = 3 / 5
சி பி கமெண்ட் - ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது 


இன்னொரு விமர்சனம் 
என்று தாராளமாகச் சொல்லும் அளவுக்கு ‘சிங்கம்’ முதல் பாகத்தின் அதே கூட்டணியுடன், வெளிவந்திருக்கிறது ‘சிங்கம் 2’. முதல் பாகத்தின் அசுர வெற்றியை தக்க வைத்துள்ளதா சூர்யா + ஹரி டீம்?

முதல் பாகத்தின் ‘க்ளிப்’பிங்கோடு ஆரம்பிக்கிறது படம். ‘சிங்கம்’ க்ளைமேக்ஸில் ரகசியமாக தூத்துக்குடியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கும் சூர்யா, இப்படத்தின் முதல் காட்சியிலேயே அஞ்சலியுடன் ஆடிக்கொண்டே கடத்தல் கும்பல் ஒன்றை வேவு பார்க்கிறார். ஹன்சிகா படிக்கும் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கும் ‘மிஷனி’ல் இறங்குகிறார் துரைசிங்கம் (சூர்யா). 

லோக்கல் ரவடி சகாயம் (ராஜேந்திரன்), அவனுடைய முதலாளி பாய் (முகேஷ் ரிஷி), அவனுக்கும் மேலே தங்கராஜ் (ரகுமான்) என கூட்டணி அமைத்து போதைப் பொருட்கள் கடத்துவதை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார் துரைசிங்கம். மொத்த நெட்வொர்க்குக்கும் பின்னணியில் இன்டர்நேஷனல் கடத்தல்காரனான டேனி (டேனி சபானி) இருப்பது தெரியவந்ததும் கழட்டி வைத்த காக்கிச் சட்டையை மீண்டும் அணிந்து கொண்டு வேட்டைக்குக் கிளம்புகிறார். அதன்பிறகு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து வேட்டையின் முடிவை துரைசிங்கம் எப்படி எழுதுகிறார் என்பதே ‘சிங்கம் 2’வின் அதிரடி ஆக்ஷன் முடிவு.

‘சிங்கம்’ படத்தின் முக்கிய கேரக்டர்கள் அனைத்தையும் அட்சரசுத்தமாக அப்படியே பயன்படுத்தி, இப்படம் அதன் தொடர்ச்சி என்பதை ஆணித்தரமாக ரசிகர்களின் மனதில் பதிய வைத்ததற்காக ‘ஸ்பெஷல் பொக்கே’ கொடுக்கலாம் இயக்குனர் ஹரிக்கு. முதல் பாகத்தின் முக்கிய கேரக்டர்கள், இந்த இரண்டாம் பாகத்தின் சில புதிய கேரக்டர்கள் என ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை, எந்தவிதத்தில் எப்படி
ப் பயன்படுத்த வேண்டும் என யோசித்து அற்புதமாக திரைக்கதை அமைத்திருப்பதில் தெரிகிறது ஹரியின் இன்டலிஜென்ஸ். 

அதேபோல், மூன்று வருடங்களுக்கு முன் ‘சிங்கம்’ படத்தில் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் அதைவிட பலமடங்கு வெறியோடு இப்படத்தில் விளையாண்டிருக்கிறார் ‘துரைசிங்கமாக’ கர்ஜித்திருக்கும் சூர்யா. அவருடைய நடை, உடை, பாவனை என அத்தனையிலும் சூர்யாவை மறக்கடித்துவிட்டு ‘துரைசிங்க’த்தை வாழ வைத்திருக்கிறார். டிரைலரில் பார்த்தபோது, கொஞ்சம் ஓவராகத் தெரிந்த சூர்யாவின் ‘பஞ்ச்’ வசனங்களை படத்தின் காட்சிகளோடு சேர்த்துப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பு. மொத்தத்தில் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார்.

‘காவ்யா’வாக அனுஷ்கா இரண்டு பாடல்களுக்கு வந்து அழகாக ஆடிவிட்டுப் போகிறார். ‘சத்யா’வாக ஹன்சிகா ‘ஹாயாக’ ஆங்காங்கே வருகிறார் (இருந்தாலும், அவரை சாகடி
த்து ஹன்சிகாவின் ரசிகர்களை இப்படி நோகடிக்க வேண்டுமா ஹரி சார்?). வில்லன்கள் ராஜேந்திரன், முகேஷ் ரிஷி, ரகுமான் அவரவர் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். மெயின் வில்லன் டேனி சபானியின் ஓபனிங் பலமாக இருந்தாலும், ஃபினிஷிங் சரியில்லை. 

ஏட்டு எரிமலையின் (விவேக்) ஆட்டங்களைக் குறைத்து, ட்ரண்டுக்குத் தகுந்தபடி சூசையின் (சந்தானம்) அடாவடிகளைக் அரகேற்றி படம் நெடுக ‘கலகலப்பு’க்கு தீனி போட்டிருக்கிறார்கள். அதிலும் அனுஷ்காவைப் பார்த்ததும் ‘காதல் வந்தாலே...’ என அனுஷ்காவுடன் சந்தானம் டூயட் பாடுவதுபோல் நினைப்பது, ‘கஜினி’யின் அசின் - வடிவேல் காம்பினேஷன் ரிட்டர்ன்ஸ். தியேட்டரில் சிரிப்பலை அடங்க வெகுநேரம் பிடிக்கிறது. ‘பஜ்ஜி சீவுறீங்களா?’, ‘கப்பல் தரைதட்டியிருச்சு...’ என தன் டபுள்மீனிங் வசனங்களையும் வழக்கம்போல் ஆங்காங்கே அள்ளித் தெளிக்க மறக்கவில்லை சந்தானம்.


ஜெட் வேக ஸ்கிரீன் ப்ளேவிற்கு ஈடுகொடுத்து கேமராவுடன் ஓடியிருக்கிறார் ப்ரியன். அதேபோல் எடிட்டர்கள் வி.டி.விஜயன் - டி.எஸ்.ஜெய் கூட்டணியும் அற்புதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்கும்போது பழைய சிங்கம்போல் இருந்தாலும், காட்சிகளோடு பார்க்கும்போது ஓகே. ‘சிங்கம் டான்ஸ்...’ பாடலில் சூர்யா, அனுஷ்காவின் நடனம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். பின்னணி இசை, படத்தின் ஓட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் ராக்கி ராஜேஷும், அனல் அரசும் ‘பத்தரை டன்’ வெயிட்டில் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக, மழையில் நனைந்துகொண்டே எதிரிகளை சூர்யா துவம்சம் செய்யும் அந்த சண்டைக்காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.

‘சிங்கம்’ முதல் பாகத்தில் இருந்த சென்டிமென்ட், லவ் போர்ஷன்ஸ் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதற்கு
ம் சேர்த்து ஆக்ஷனில் விருந்து படைத்திருக்கிறார்கள். ‘லாஜிக்’ பற்றியெல்லாம் யோசிப்பதற்கு ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இன்னும் சொல்லப்போனால் ‘லாஜிக்’ விஷயங்களையும் அற்புதமாக யோசித்துதான் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் ஹரி. 

‘அம்மா அப்பா பேச்சைக் கேட்காம வேற யார் பேச்சை கேக்குறது’, ‘அவ கண்ல கண்ணீர் வந்தா என் நெஞ்சுல ரத்தம் வரும்’ போன்ற ‘நச்’ வசனங்களைக் கொடுத்த வசனகர்த்தா ஹரி, ‘ஆப்பரிக்கன் குரங்கு’ என்ற வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாமே? ஆப்பிரிக்கன் போலீஸுடன் சேர்ந்து வில்லனை சேஸ் செய்யும்போது, தேவையில்லாத அந்த பில்-டப் காட்சியும் மிகைப்படுத்தலாகவே இருக்கிறது. அதேபோல் இரண்டேமுக்கால் மணி நேரம் பரபரப்பாக செல்லும் திரைக்கதையின் க்ளைமேக்ஸ் ‘திடும்’மென முடிந்துவிடுவதும் திருப்தியளிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த வருடத்தின் ‘சூப்பர்ஹிட்’ படவரிசையில் ‘சிங்கம் 2’விற்கு நிச்சயம் இடமுண்டு.

(குறிப்பு : தமிழில் ‘சீக்குவல்’ படங்கள் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒன்றோடொன்று எந்த சம்பந்தமும் இல்லாமலே இருக்கும். தொடர்ச்சியான இந்த இரண்டு படங்களின் வெற்றி, அனேகமாக ஜாக்கிசானின் 

ஆரூர் மூனா செந்தில்  அவர்களின் விமர்சனம் 

சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.

அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.

அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.

படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.

முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது. 

கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.

முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.

வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.

படம் பார்த்த விமர்சகர்கள், சில பதிவர்கள் படத்தினைப் பற்றி ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் அதனைப் பற்றி சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்ற சி கிளாஸ் ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்கள், அது தான் இந்த படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம்.

லாஜிக் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்கான படம் இது இல்லை. மற்றபடி மசாலா சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்து

ஆரூர் மூனா செந்தில் 

பீட் தமிழ் விமர்சனம் 


படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார். 

அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார். 

சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது. 

ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.

இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)

சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.

அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.

அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.

படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்
தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.

முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது. 

கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.

முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.

வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக 
திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக