சனி, 19 ஜனவரி, 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா விமர்சனம்

கண்ணா லட்டு திங்க ஆசையா விமர்சனம்











முதல் காட்சியில் அலெக்ஸ்பாண்டியன் என்று வரவும் தியேட்டர் மாறி வந்து விட்டோமோ என சின்ன குழப்பம் வர சேது சட்டையை கழட்டும் போது நம் குழப்பம் தீருகிறது







பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பு என்பதால் கதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை

மூன்று இளைகர்கள்ஒரு பெண்ணை காதலிக்க அவர்களில் ஒருவரை கை பிடிப்பதே  கதை

முதலில் ராமநாரயணனுக்கு நன்றி கூற வேண்டும்

குறைந்த முதலீட்டில் மீண்டும் தமிழ் சினிமா வெற்றி பெரும் என்று நிரூபணம் செய்ததற்கு

சந்தானம் அவர்கள் படத்தின் தயாரிப்பாளராய் இருந்தும் படம் முழுக்க நான்தான் வருவேன் என்று அடம் பிடிக்காமல் பவர் ஸ்டாரை முக்கியப்படுத் தியதற்கு

இன்று போய் நாளை வாவில் பாக்யராஜ் மட்டுமே பட்டையை கிளப்புவார்
ஆனால் இந்த பதிப்பில் பவரும் சந்தானமும் அதை நிவர்த்தி செய்கிறார்கள்

சிலரை பாக்க பாக்க பிடிக்கும் என்னை பாக்காமலே பிடிக்கும் என பவர் சொல்லும்போது அரங்கம் குலுங்க பவருக்கு இனி ஏறு முகம்தான்

அதுவும் சலங்கை ஒலி  கமல் போல் ஆட அவர்க்கு ஜால்ராக்கள் அடிக்கும் லூட்டி நல்ல கலகலப்பு
Srinivasan

பவரை என்ன கலாய்ப்பு கலாய்த்தாலும்  சிரித்த முகத்துடன் இருப்பது அவர் மட்டும்தான் வாழ்க பவர்

டேய் நானாவது காமடியன்னு தெரிஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்
நீ அது கூட தெரியாம இருக்கியே என பவரை வாரும் சந்தானம்

சந்தானத்தின் நண்பர் சிம்பு என்பதால் அவரும் வந்து போகிறார்
லாஜிக் பார்க்காமல் இருந்தால் சிரிக்க வைக்கும் படம்


பவர் வரும் அனைத்து காட்சிகளும் ரசிக்க வைக்கிறார்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக